;
Athirady Tamil News

கடுவெல பிரேடி குழுவினர் கைது!

0

வீடுகளுக்குள் நுழைந்து சொத்துக்களைத் திருடிய கடுவெல பிரேடி என்ற பெயர் சூட்டப்பட்ட நபர் உட்பட மேலும் சில சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

போதைப் பொருட்களுடன் உடஹமுல்லை பிரதேசத்தில் வைத்து மிரிஹானை தலைமையக பொலிஸாரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

35 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள்
பிரதான சந்தேக நபர் போதைப் பொருள் வைத்திருந்த நிலையிலேயே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசாரணையின் போது, திருடப்பட்ட சுமார் 35 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் மூன்று பெரிய தொலைக்காட்சிப் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் மிரிஹானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.