;
Athirady Tamil News

யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய பிறந்தநாள் கொண்டாட்டம்; முக்கிய நபர் சிறையிலடைப்பு!

0

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக கூட்டம் கூட்டி பிறந்தநாளை கொண்டாடிய , பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரின் விசேட நடவடிக்கையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை விசாரணைக்கு பின்னர், நேற்றைய தினம் யாழ்.நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்தி இருந்தனர்.

14 நாட்களுக்கு விளக்கமறியல்
இதன் போது , சந்தேகநபரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் , யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தனர்.

அதுமட்டுமல்லாது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக, 50க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த 150க்கும் மேற்பட்ட நபர் கூடி தங்களில் ஒருவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.