;
Athirady Tamil News

சுகாதாரத்துறையில் ஏற்படவுள்ள மாற்றம் : புதிய நியமனம் பெற்ற அமைச்சர் உறுதி

0

புதிதாக நியமனம் பெற்றுள்ள சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, சுகாதாரத்துறையின் கொள்கைகள் மற்றும் தனிநபர்களின் அடிப்படையில் சில முக்கியமான மாற்றங்களைச் செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் நேற்று (24) சுகாதார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையின் சுகாதாரத் துறை அண்மைய பொருளாதார நெருக்கடியால் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது.

போதைப்பொருள் பாவனை
அதன்படி, சுகாதாரத் துறையில் ஏற்பட்ட பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டாலும், சரிசெய்யப்பட வேண்டிய பிரச்சினைகள் நிறைய இருக்கின்றன, எனவே, இந்த பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைவரையும் ஒத்துழைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.

மேலும், தேவையான துறைகளில் பொருத்தமான மாற்றங்களை மேற்கொள்ள தான் உறுதியாக இருப்பதாகவும், நீண்ட காலத்திற்குத் தேவையான கட்டமைப்பு மற்றும் தனிப்பட்ட மாற்றங்கள் இரண்டையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், அண்மைக்காலங்களில் போதைப்பொருள் பாவனையினால் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்குவதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது என அவரிடம் வினவப்பட்டபோது, குறித்த சம்பவங்கள் தொடர்பில் ஆராய தனக்கு இன்னும் சிறிது கால அவகாசம் தேவை என அமைச்சர் கூறியிருந்தார்.

தவிரவும், சுகாதாரத் துறைக்கு சவாலாக உள்ள ஒவ்வொரு விஷயத்திலும் நான் கவனம் செலுத்துவேன் என்றும் அதற்கேற்ப தீர்வுகளை எடுப்பேன் என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன் என்றும் பத்திரன இந்த வேளையிலே உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.