;
Athirady Tamil News

யாழில் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த மூதாட்டிக்கு நேர்ந்த அவலம்

0

யாழில் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த நிலையில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யாழ் சல்லியாவத்தை, பொலிகண்டி தெற்கைச் சேர்ந்த பெண்ணொருவர் நேற்று முன்தினம் இரவு தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென மயங்கிச் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அப் பெண்ணை உடனடியாக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்
67வயதான ஜெயேந்திரன் சோதிமலர் எனும் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் உடற்கூற்றுப் பரிசோதனையில் மாரடைப்புக் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.