;
Athirady Tamil News

யாழில் இயங்கி வரும் சட்டவிரோத மதுபானசாலை: உடனடியாக கட்டுப்படுத்த கோரிக்கை

0

உடுப்பிட்டி பகுதியில் சட்டவிரோத மதுபான சாலை ஒன்று இயங்கி வருவதாகவும் குறிப்பாக மதுபான சாலை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையானது, யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் இன்று(26) விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், “உடுப்பிட்டி மக்கள் வங்கிக்கு அருகில் உள்ள ஒரு வீடு ஒன்றில் சட்டவிரோதமான மதுபான சாலை ஒன்று இயங்கி வருகின்றது.

கோரிக்கை
அதாவது மதுபான சாலைக்கு செல்வோர் பெல் அடித்து உள்ளே சென்று மதுபானத்தை கொள்வனவு செய்ய முடியும் எனவே அதனை கட்டுப்படுத்துமாறு குறித்த பிரிவுக்கான காவல்துறை பொறுப்பதிகாரியினை உடனடியாக குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கிறோம்” என கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.