;
Athirady Tamil News

தாமாக இயங்கிய கைத்துப்பாக்கியால் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த கதி!

0

சிலாபம் பொலிஸ் நிலையத்தில் கைத்துப்பாக்கி ஒன்று தாமாக இயங்கியதில் பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த குறித்த பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் அங்கிருந்தவர்களால் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என சிலாபம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கைத்துப்பாக்கியை பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்புப் பெட்டியில் வைக்கச் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் சிலாபம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.