;
Athirady Tamil News

அம்பாறையில் சட்ட விரோதமாக கஞ்சா பயிர்ச்செய்கையில் ஈடுபட்டவர் கைது

0

அனுமதி பத்திரமின்றி கஞ்சா மரத்தை பயிரிட்ட சந்தேக நபரை அம்பாறை உஹன பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரை நேற்று(26.10.2023) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமாரிகம பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி கஞ்சா பயிரிடப்பட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை
இதன் போது சுமார் 6.5 அடி உயரமான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகள்அழிக்கப்பட்டதுடன், கைதான சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை உஹன பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.