;
Athirady Tamil News

சட்டக் கல்லூரி அனுமதி போட்டிப் பரீட்சையில் கொப்பியடித்த எம்.பி!

0

சட்டக் கல்லூரி அனுமதி போட்டிப் பரீட்சையில் விடைகளை பார்த்து எழுதிய தென் மாகாணத்தை சேர்ந்த எம்.பி. தொடர்பில் தகவல் கசிந்துள்ளது.

தென் மாகாணத்தை சேர்ந்த நாளுமன்ற உறுப்பினர் ஒருவரே இவ்வாறு பரீட்சையில் பார்த்து எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடும் நிபந்தனைகளுடன் சட்டக் கல்லூரிக்கான அனுமதி பரீட்சையானது பரீட்சை திணைக்களத்தினால் நடத்தப்படுகிறது.

நீதி அமைச்சர் காதுக்கும் எட்டிய விடயம்
இந்நிலையில் குறித்த எம்.பி. தான் கொண்டுவந்திருந்த சில தாழ்களில் விடைகளை எழுதி வைத்திருந்து அதனை பார்த்து எழுதியுள்ளதாக கூறப்படும் நிலையில் அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எனினும் இந்த விசாரணைகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக அந்த எம்.பி. அரசியல் வாதிகளை நாடியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதேவேளை சம்பவம் தொடர்பில் இது தொடர்பில் தனக்கும் சில தகவல்கள் கிடைத்துள்ளன நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கூறியுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.