;
Athirady Tamil News

விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டமைக்கு இழப்பீடு கோரும் முஸ்லீம்கள்!

0

விடுதலைப்புலிகளினால் வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் 33 வருடங்களாகிவிட்டதை நினைவுகூரியும், தமக்கான நஷ்ட ஈட்டை வழங்குமாறு கோரியும் புத்தளத்தில் முஸ்லிம்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

மக்கள் மறுமலர்ச்சி முன்னனி கட்சியின் தலைவரால் புத்தளம் – கொழும்பு வீதியின் ரத்மல்யாய பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை
இதன்போது விடுதலைப்புலிகளினால் வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு, 33 வருடங்களாகியும் காலங்காலமாக மாறி வருகின்ற அரசாங்கங்களினால் தமக்கு நன்மையான எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் , தாம் இழந்தவைக்கான நஷ்ட ஈட்டை வழங்குமாறு கோரியும், வேறு சில கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதன்போது தமது கோரிக்கைகளை எடுத்துக்கூறியும், கோஷங்களை எழுப்பியவாறும் பதாதைகளை ஏந்தியவாறும் பலர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.