;
Athirady Tamil News

அதிகாலையில் பாரிய தீ விபத்து! மற்றுமொரு வர்த்தக கட்டடம் பாதிப்பு

0

பாணந்துறை நகருக்கு அருகில் உள்ள இரண்டு மாடிக் கட்டடத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து விளையாட்டு பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையம் ஒன்றில் இன்று (28) காலை 7.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

தீ விபத்திற்கான காரணம்
மொரட்டுவை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில், தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தீயினால் பாரியளவில் விளையாட்டு பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.