;
Athirady Tamil News

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி!

0

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க வர்த்தமானி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

கொழும்பு துறைமுக நகரத்தில் சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகம் அல்லது சுங்க வரியில்லா வணிக வளாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேவைகள் குறித்தே அவ்வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அவ்வர்த்தமானியில் அறியத்தருகையில்,
உலகளாவிய அனுபவம்
“அதன்படி, ஒரு முதலீட்டாளர் ஒரு சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகத்தை நடத்த குறைந்தபட்சம் 05 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய வேண்டும்.

குறித்த முதலீட்டாளருக்கு சுங்க வரியில்லா வர்த்தக நடவடிக்கைகளில் உலகளாவிய அனுபவமும் இருக்க வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.