;
Athirady Tamil News

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்

0

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளை உள்ளடக்கி மாகாண மட்டத்தில் அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இன்று(1) அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்தார்.

அத்தோடு, 24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளதாக தொழிற்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

வேலை நிறுத்தம்
அதேவேளை, ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் நாளை (02) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

பின்னர் வடமாகாணத்தில் உள்ள அனைத்து பொது வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் 3ஆம் திகதியும், வடமேற்கு மாகாணத்தில் 6ஆம் திகதியும், சப்ரகமுவ மாகாணத்தில் 7ஆம் திகதியும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.

மேலும், மத்திய மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் 08ஆம் திகதி வேலை நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

தென் மாகாணம் மற்றும் வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் எதிர்வரும் 9ஆம் திகதி இந்தப் பணிப்புறக்கணிப்பில் ,ஈடுபடவுள்ளதாகவும் எதிர்வரும் 10ஆம் திகதி மேல்மாகாண அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.