;
Athirady Tamil News

வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத இளைஞனின் சடலம் மீட்பு!

0

கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்த மீட்பு சம்பவம் இன்று(05) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை விசாரணை
குறித்த சடலம் தொடர்பிலான தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

இந்நிலையில் சடலம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை காவல்துறையினர் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.