;
Athirady Tamil News

பண்டிகையை முன்னிட்டு ஹட்டன் நகர கடைகளில் அதிரடி சோதனை!

0

வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹட்டன் நகரில் உள்ள கடைகளை சோதனையிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, தீபாவளி பண்டிகை முடிவடையும் வரையில் இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பிலுருந்து ஹட்டன் நோக்கி பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நிலையில், வாகனங்களை சோதனையிடும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஹட்டன் மற்றும் ஹட்டனை அண்மித்த பகுதிகளில் பெருமளவான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பல கடைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு மக்கள் பாவனைக்க பொருந்தாத பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

தீபாவளி பண்டிகை நிறைவடையும் வரையில் முடியும் வரை இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நிலையில், வாகனங்களை சோதனையிடும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஹட்டன் மற்றும் ஹட்டனை அண்மித்த பகுதிகளில் பெருமளவான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.