;
Athirady Tamil News

இலங்கையில் ஏற்பட்ட பெரும் அசம்பாவிதம்: இருவர் உயிரிழப்பு: 2 பேர் கவலைக்கிடம்!

0

பதுளை பகுதியொன்றில் அமைந்துள்ள வீடுகள் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் ஹாலிஎல, ரொக்கதென்ன தோட்ட பகுதியில் நேற்று சனிக்கிழமை (11-12-2023) இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் பதுளை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட நிலையில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 4 வீடுகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த மேலும் இருவரின் நிலை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.