;
Athirady Tamil News

தெமட்டகொட பகுதியில் குண்டுத் தாக்குதல்: வெளியான காரணம்

0

கொழும்பில் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரின் வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த குண்டுத் தாக்குதலானது தெமட்டகொட வெலுவான பிரதேசத்தில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான தெமட்டகொட ருவானின் வீட்டின் மீது நடத்தப்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசாரணை
வீட்டின் முன் வாயிலில் இரண்டு குண்டுகளும் தோட்டத்தில் ஒரு வெடிகுண்டும் வீசப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை தெமட்டகொட ருவன் புஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.