;
Athirady Tamil News

ஆற்றில் மூழ்கி இளைஞர் மாயம்

0

ரம்புக்கனை, போலகம பாலத்திற்கு அருகில், மா ஓயாவில் மூழ்கி இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

மா ஓயாவில் நீராடச் சென்ற 29 வயதுடைய நபரே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பொலிஸ் விசாரணை
நண்பர்கள் குழுவுடன் பிறந்தநாள் விழாவை நடத்துவதற்காக குறித்த இடத்திற்குச் சென்ற போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காணாமல் போன இளைஞரை தேடும் பணியை பொலிஸாரும் கடற்படையினரும் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.