;
Athirady Tamil News

யாழ்.மாநகர எல்லைக்குள் 4 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி

0

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் சுமார் 4 ஆயிரம் நாய்களுக்கு விசர் நோய் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்னர்.

யாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட 08 பொது சுகாதார பரிசோதகர் பிரிவிலும் உள்ள வளர்ப்பு நாய்கள் மற்றும் வீதியில் கட்டாக்காலி நாய்களாக திரிந்த நாய்கள் என 3ஆயிரத்து 983 நாய்களுக்கு ஏ.ஆர். வி தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அதேவேளை 290 பெண் நாய்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.