;
Athirady Tamil News

பணய கைதிகளை விடுவிக்க ஹமாஸ் வெளியிட்ட நிபந்தனை

0

இஸ்ரேலில் தம்மால் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு நிபந்தனைகளை விதித்துள்ளது.

தங்கள் தரப்பு நிலைப்பாட்டையும், கோரிக்கைகளையும் ஹமாஸ் அமைப்பினரின் ஆயுதப்படையான அல்கசாம் பிரிகேட்ஸ் (Alqassam Brigades) பிரிவின் செய்தித்தொடர்பாளர் அபு உபைதா (Abu Ubaida), டெலிகிராம் (Telegram) கருத்து பரிமாற்ற செயலியின் ஹமாஸ் அமைப்பின் அதிகாரபூர்வ கணக்கில் செய்தியாக வெளியிட்டிருக்கிறார்.

ஐந்து நாட்கள் போர் நிறுத்தம்
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, காசாவில் 5 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டால் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 70 பணய கைதிகளை விடுவிக்க நாங்களும் ஒப்பு கொள்கிறோம்.

தள்ளிப்போடும் இஸ்ரேல்
ஆனால் அந்த போர் நிறுத்தம் முழுமையானதாக இருக்க வேண்டும். காசா முனை பகுதியில் அனைத்து பகுதிகளுக்கும் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதையும் இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும்.

நாங்கள் வாய்ப்பு அளித்து விட்டோம்; ஆனால் இஸ்ரேல் வேண்டுமென்றே காலதாமதம் செய்து கோரிக்கைகளை புறக்கணித்து, முடிவு எடுப்பதை தள்ளி போடுகிறது என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.