;
Athirady Tamil News

யுனெஸ்கோவின் நிர்வாக சபைக்கு தெரிவாகியுள்ள இலங்கை!

0

ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் (யுனெஸ்கோ) நிறைவேற்று சபைக்கு இலங்கை 144 வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பாரிசில் நேற்றைய தினம் (15) இடம் பெற்ற யுனெஸ்கோ அமைப்பின் 2023 தொடக்கம் 2027 வரையான காலகட்டத்திற்கான 42 வது பொது மாநாட்டின் போதே இந்த நிறைவேற்று சபைக்கான உறுப்பு நாடுகள் தெரிவிற்குரிய வாக்கெடுப்பு இடம்பெற்றது .

ஆசிய-பசுபிக் பிராந்தியத்தின்
இதன்போது 58 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்புக்கான தேர்தலில், 188 உறுப்பு நாடுகள் வாக்களிப்பதற்காக பங்குபற்றியிருந்தது இதில் 144 வாக்குகளைப் பெற்று இலங்கை நிறைவேற்று சபையில் அங்கத்துவத்தை பெற்றுள்ளது.

மேலும், ஆசிய – பசுபிக் பிராந்தியத்தின், ஒன்பது வேட்பாளர்களில் ஆறு பேர் யுனெஸ்கோ உறுப்பு நாடுகளால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.

இலங்கையுடன், பாகிஸ்தான், இந்தோனேஷியா, பங்களாதேஷ், கொரியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளும் இந்த பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளாக உறுப்புரிமை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.