;
Athirady Tamil News

கல்வித் தகைமையுடன் தொழில் தகைமையும் வாழ்வுக்கு அவசியம் : வடக்கு ஆளுநர் தெரிவிப்பு

0

சவால்மிகுந்த போட்டித்தன்மையான தற்காலத்தில் கல்வித் தகைமையுடன் தொழில் தகைமையும் இருந்தால் மட்டுமே வாழ்வில் வெற்றியடைய முடியும் என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.

வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் நடாத்தப்படும் மனைபொருளியல் டிப்ளோமா சான்றிதழ் பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 257 மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் இன்று(16) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஆளுநர் இதனைக் குறிப்பிட்டார்.

டிப்ளோமாதாரிகளுக்கு பாராட்டு
இதன்போது தொழிற்கல்வியின் முக்கியத்துவம் குறித்து தெளிவுப்படுத்திய ஆளுநர், பல்தேசிய போட்டிதன்மையான நிறுவனங்களில் தொழில்வாய்ப்பை எதிர்பார்க்கும் அனைவரும் கல்வித் தகைமையுடன் தொழில் தகைமையும் பெற்றிருந்தால் மாத்திரமே, சவால்களுக்கு மத்தியில் சிறந்த இலக்கை அடைய முடியும் எனத் தெரிவித்தார்.

மனைபொருளியல் டிப்ளோமா சான்றிதழ் பயிற்சி நெறியை பூர்த்தி செய்த மாணவிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த ஆளுநர், தொழில் தகைமையை மேலும் வளர்த்துக் கொள்வதற்கான ஆளுமையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், வட மாகாண பிரதம செயலாளர், வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் , ஏனைய திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.