;
Athirady Tamil News

தொண்டமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் சூரசம்ஹாரம்

0

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – தொண்டமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில்
இன்றைய தினம் சூரசம்ஹாரம் மிக சிறப்பாக நடைபெற்றது.

முருகனுக்கான கந்தசஷ்டி விரதம் கடந்த செவ்வாய்க்கிழமை (14) ஆரம்பமாகி அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் ஐந்தாவது நாளான இன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது.

இதன்போது பெருமளவான பக்தர்கள் ஆலயத்தில் திரண்டிருந்தனர்.

முருகப்பெருமானுக்கும் சூரபத்மனுக்கும் இடையே நடைபெறும் போரை மையமாக கொண்டே சூரசம்ஹாரம் ஆலயங்களில் நடைபெற்று வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.