;
Athirady Tamil News

நாயால் உயிரைவிட்ட மகன் – நாய் உருவத்திலேயே வீட்டிற்கு வந்ததால் மிரண்ட ஊர் மக்கள்!

0

நாயால், பைக் நிலைதடுமாறி கீழே விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.

குறுக்கே வந்த நாய்
கர்நாடகா, ஹொன்னாளி காசினகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் திப்பேஷ். இரவு அனவேரி என்ற கிராமத்தில் இருந்து, காசினகெரே நோக்கி பைக்கில் வேகமாக சென்றுள்ளார். அப்போது சாலையின் குறுக்கே நாய் ஒன்று ஓடி வந்துள்ளது.

நாய் மீது மோதாமல் இருக்க, திப்பேஷ் பைக்கை திருப்பினார். அவரது கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையில் கவிழ்ந்தது. அதில் தலையில் பலத்த படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து அவரது இறுதிச்சடங்கு மறுநாள் நடந்துள்ளது.

இளைஞர் பலி
இந்நிலையில், விபத்துக்கு காரணமான நாய், அன்று இரவு திப்பேஷின் வீட்டிற்கு சென்று வீட்டில் உள்ள அனைத்து அறைகளுக்கும் சென்று சுற்றி பார்த்துள்ளது.

அதன்பின், திப்பேஷின் தாய் முன் சென்ற நாய், மன்னிப்பு கேட்பது போல கால்களை மடக்கி அமர்ந்து தனது காலால் அவரது கையை வருடியுள்ளது. இதனால் அவர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். மேலும், நீ எந்த தவறும் செய்யவில்லை; எல்லாம் விதி’ என்றுத் தெரிவித்துள்ளார்.

இதைப் பார்த்த உறவினர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர். பின் நாய் அங்கிருந்து சென்றுவிட்டது. இச்சம்பவம் குறித்து அந்த பகுதி மக்கள் பரவலாக பேசி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.