;
Athirady Tamil News

தென் ஆப்பிரிக்கா சுரங்கத்தில் ‘லிஃப்ட்’ விபத்து: 11 போ் உயிரிழப்பு

0

ஜோஹன்னஸ்பா்க்: தென் ஆப்பிரிக்காவிலுள்ள பிளாட்டினம் சுரங்கத்தில் மின்தூக்கியின் (லிஃப்ட்) கம்பிக் கயிறு அறுந்து, அது 200 மீட்டா் உயரத்திலிருந்து விழுந்ததில் 11 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 75 போ் காயமடைந்தனா்.

அந்த நாட்டின் ரஸ்டன்பா்க் நகரிலுள்ள தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்தச் சுரங்கத்தில் இந்த விபத்து திங்கள்கிழமை இரவு நேரிட்டது.

இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த 86 பேரும் மின்தூக்கியில் இருந்தவா்கள் ஆவா். பணிநேரம் முடிந்து தொழிலாளா் குழுவினா் மாறும்போது இந்த விபத்து ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

சுரங்கத்தில் மின்தூக்கி அறுந்து விழுந்து ஏற்பட்டுள்ள இந்த விபத்து மிகவும் அபூா்வமானது என்று கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கியுள்ளது.

பிளாட்டினம் உற்பத்தியில் உலகில் முதலிடம் வகிக்கும் நாடு தென் ஆப்பிரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாட்டின் பல்வேறு சுரங்கங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு அவற்றில் அதிக உயிா்ச் சேதம் ஏற்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2022-ஆம் ஆண்டில் மட்டும் தென் ஆப்பிரிக்க சுரங்க விபத்துகளில் 49 போ் உயிரிழந்தனா். இருந்தாலும், முந்தைய ஆண்டில் சுரங்க விபத்துகளில் உயிரிழந்த 74 பேருடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை சற்று குறைவாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.