;
Athirady Tamil News

2024 ஆம் ஆண்டில் உலகிற்கு வரவிருக்கும் பேரழிவு: அதிர்ச்சி தரும் பாபா வாங்காவின் கணிப்பு

0

பாபா வங்கா உயிரிழப்பதற்கு முன், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார்.

இவரது கணிப்புகளில் 85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகின்றது. பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா 12 வயதில் சூறாவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தார். பார்வை பறிபோனாலும் கடவுள் தனக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தியை வழங்கியுள்ளதாக பல விடயங்களை கணித்துள்ளார்.

அந்த வகையில், பாபா வங்காவின் 2024 ஆம் ஆண்டு குறித்த கணிப்புகள் தற்போது பேசு பொருளாகியுள்ளன.

பாபா வங்காவின் கணிப்புகள்
ரஷ்ய அதிபர் புடின் அவரது நாட்டைச் சேர்ந்த ஒருவராலேயே கொல்லப்படுவார்.

ஐரோப்பாவில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரிக்கலாம், மிகப் பெரிய நாடு உயிரி-ஆயுதங்களைப் பயன்படுத்தத் தொடங்கும்.

அதிகரித்து வரும் கடன் அளவுகள் மற்றும் அதிகரிக்கும் புவி, அரசியல் பதற்றங்களால் மிகப் பெரிய பொருளாதார பிரச்சினை ஏற்படும். பெரிய அளவில் இயற்கை பேரிடர்கள் ஏற்படும்.

மின் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற இடங்கள் சைபர் ஹேக்கர்களால் குறிவைக்கப்படும்.

கேன்சர், அல்சைமர் போன்ற பெரிய மருந்து இல்லாத நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படும். குவாண்டம் கம்பியூடிங் தொழில்நுட்பம் அடுத்தகட்டத்தை எட்டும்.

இயற்கை பேரிடர்
2024ம் ஆண்டில் பயங்கரமான வானிலை நிகழ்வுகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் இருக்கும் என்றும் அவர் முன்னறிவித்துள்ளார்.

பூமியின் சுற்றுப்பாதையில் சிறிது மாற்றம் வரலாம். இது மிக மிக மெதுவாக நீண்ட காலத்திற்கு நடக்கும். ஆனால், இந்த மாற்றத்தில் வேகம் அதிகரித்தால் பயங்கர இயற்கை பேரிடர் ஏற்படும்.

சைபர் தாக்குதல்
பாபா வங்காவின் கூற்றுப்படி, 2024 ஆம் ஆண்டிலும் அதிக சைபர் தாக்குதல் நிகழலாம்.

ஹேக்கர்களின் பலம் அதிகரிக்கும். இவர்கள் மின் உற்பத்தி ஆதாரங்களையும் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்கலாம். இதனால் தேசிய பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்படும்.

மருத்துவத்துறையில் புதிய கண்டுபிடிப்பு
பாபா வங்காவின் கணிப்பின்படி, 2024 ஆம் ஆண்டில் மருத்துவத் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் சாத்தியமாகும்.

குறிப்பாக புற்றுநோய் மற்றும் அல்சைமர் போன்ற நோய்களுக்கு புதிய சிகிச்சைகள் கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது.

நாஸ்ட்ராடாமஸ் கணிப்புகள்
வறண்ட பகுதிகள் மேலும் வறண்டு போகும் என்றும், அதிக வெள்ள பெருக்குகள் ஏற்படும் என்றும், பஞ்சம் ஏற்படலாம் என்றும் கணித்துள்ளார்.

சீனாவுடன் கடற்படை மோதல் ஏற்படும். அடையாளமே இல்லாத ஒருவர் அரசராவார். போப்பாண்டவர் மாற்றப்பட்டு இளம் போப் உருவாவார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.