;
Athirady Tamil News

பொலிஸ் மா அதிபர் உட்பட நால்வருக்கு அழைப்பாணை!

0

இரகசியப் பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடு ஒன்று தொடர்பாக பொலிஸ் மா அதிபர் மற்றும் மூன்று பேரை அடுத்த வருடம் பெப்ரவரி 28ஆம் திகதி நேரில் ஆஜராகுமாறு உயர் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

எஸ். துரைராஜா, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்ணான்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்பட்டபோதே மேற்படி அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எரிசக்தி நிபுணரான ரலபனாவ தாக்கல் செய்த இந்த மனுவில், சி.ஐ.டி பொலிஸ், கணினி குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.