;
Athirady Tamil News

கிளிநொச்சி விபத்தில் பளை இளைஞர் உயிரிழப்பு

0

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோப்பளை பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இருவர் படுகாயம்
நேற்று புதன்கிழமை (29) பிற்பகல் பளை நகர பகுதியில் இருந்து புலோப்பளை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் புலோப்பளையில் இருந்து பளை நகரப்பகுதியை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியுள்ளது.

இதில் குணம் கணேசன் வயது 20 என்பவரே பலியாகியுள்ளார். உயிரிழந்த இளைஞன் பளை நகரம் பளையை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.