;
Athirady Tamil News

தொண்டமனாற்றில் இறந்து மிதக்கும் மீன்கள்

0
தொண்டமானாறு கடல் நீர் ஏரி பகுதியின் நன்னீர் அணைக்கட்டின் தெற்கு பகுதியில் உள்ள கடல் நீரேரியில் நேற்று முன்தினம் தினம் புதன்கிழமை மீன்கள் இறந்து மிதந்த நிலையில் அவை அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19, 2022 ஜூலை 31 ல் இதே போன்ற சம்பவம் பதிவாகி இருந்ததுடன், மீண்டும் நான்கு வருடங்களுக்கு பின்னர் இவ்வாறு மீன்கள் இறந்து காணப்படுவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

கடும் வெப்பம் காரணமாக நீர்மட்டம் குறைந்துள்ளமையால் , நீரில் உப்பின் செறிவு அதிகரித்து , ஒட்சிசன் அளவு குறைவடைந்தமையால் , மீன்கள் இறந்து இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.