;
Athirady Tamil News

கனடா நிறுவனத்திற்கு அதிரடியாக தடைவிதித்தது பனாமா நீதிமன்றம்

0

சுரங்கப்பணிகளை மேற்கொள்ள கனடா நாட்டு நிறுவனத்திற்கு பனாமா உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இவ்வாறு தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக உலகளவில் தாமிரத்தின் (செப்பு) விலை உயரக்கூடும் என வல்லுனர்கள் தெரிவித்தனர்.

உலகின் ஒட்டுமொத்த தாமிர உற்பத்தியில் (செப்பு) குறிப்பிடத்தக்க அளவு உற்பத்தி செய்யப்பட்டு வந்த சுரங்கத்தை, அடுத்த 20 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் உரிமை கனடாவின் ஃபர்ஸ்ட் குவாண்டம் நிறுவனத்திற்கு வழங்கப் பட்டதை கண்டித்து பனாமா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

தாமிரத்தின் விலை உயரக்கூடும்
சுரங்கத்தில், இயந்திரங்களை இயக்க தேவையான நிலக்கரியை எடுத்து வர முடியாதபடி அருகே உள்ள துறைமுகத்தை ஒரு மாதத்துக்கு மேலாக மீன்பிடி படகுகள் மூலம் மீனவர்கள் முற்றுகையிட்டு வந்தனர்.

கடந்த ஒரு மாதமாக அங்கு சுரங்கப்பணிகள் நடைபெறாததால் உலகளவில் தாமிர உற்பத்தி குறைந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.