;
Athirady Tamil News

வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்!

0

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

2023(2022) கல்வி ஆண்­டுக்­கான கல்விப் பொது­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சை பெறு­பே­றுகளை இலங்கை பரீட்­சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

குறித்த பரீட்­சை பெறு­பே­றுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியுமென பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மே 29 ஆம் திகதி 3,568 தேர்வு மையங்களில் நடைபெற்றிருந்தது.

குறித்த பரீட்சையில் 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் தோற்றியுள்ளனர்.

அவர்களில், 3 இலட்சத்து 94,450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.

பரீட்­சை பெறு­பே­றுகளை https://www.doenets.lk என்ற இணைப்பினூடாக பெற்றுக்கொள்ளலாம்.

இம்முறை சுமார் 06 இலட்சம் பேர் க.பொ.த சாதாரணப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.

முன்னதாக கல்வி அமைச்சர் இன்றைய தினம் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் எனத் தெரிவித்திருந்த நிலையில் வெளியிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.