;
Athirady Tamil News

கடற்படையினர் இரத்த தானம்

0

கடற்படையின் இரத்த தான நிகழ்வு நேற்று(06) காங்கேசன்துறையில் அமைந்துள்ள “உத்தர” கடற்படை தள வைத்தியசாலையில் சிறப்பாக நடைபெற்றது.

இலங்கை கடற்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரத்த தான நிகழ்வில் கடற்படை தளபதிகள் உள்ளிட்ட 195 கடற்படையினர் உயிர்காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

இது தொடர்பில் , ஏற்பாடு செய்த வைத்தியசாலையின் கட்டளை மருத்துவ அதிகாரிக்கும், வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியர்கள் நிர்வாக அதிகாரிகள் கடற்படையின் பொது சுகாதார பரிசோதகர் ஆகியோருக்கு யாழ் இரத்த வங்கி நன்றிகளை தெரிவித்துள்ளது.

மேலும் , குறித்த இரத்ததான நிகழ்வில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியினரும் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.