;
Athirady Tamil News

யாழ். மல்லாகம் மகா வித்தியாலய ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து போராட்டம்!

0

யாழ்ப்பாணம் மல்லாகம் மகா வித்தியாலய ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இன்று வியாழக்கிழமை மதியம் 1.30 மணியளவில் குறித்த போராட்டம் பாடசாலை முன்பாக இடம்பெற்றது.

நவம்பர் 27ம் திகதி கொக்குவிலில் உள்ள மல்லாகம் மகா வித்தியாலய அதிபரின் வீட்டில் நுழைந்து இனந்தெரியாத நபர்களால் நடாத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலுக்கு நீதி கோரியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதிபர் மீதான தாக்குதலுக்கு நீதி கோரியும் இனிமேல் இவ்வாறான தாக்குதல் சம்பவம் நடைபெறக்கூடாது என்றும் மாணவர்கள் சுமூகமாக கல்வி கற்பதற்கான சூழலை உருவாக்க கோரியும் போராட்டகாரர்களால் வலியுறுத்தப்பட்டது.

போராட்டத்தின் முடிவில் தெல்லிப்பழை கோட்டக்கல்வி அலுவலகத்திற்கு போராட்டகாரர்களால் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.