;
Athirady Tamil News

மட்டுவில் கண்ணன் கோவில் பகுதியில் வாளுடன் இளைஞன் ஒருவர் கைது

0

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுவில் கண்ணன் கோவில் பகுதியில் நேற்று (16) வாளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டுவில் பகுதியில் குழுவொன்று வாள்களுடன் வீதியில் நிற்பதாக சாவகச்சேரிப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்ற நிலையில் மேற்படி இளைஞனை வாளுடன் கைது செய்துள்ளனர்.

வாள்களுடன் நின்ற ஏனையவர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில் 21 வயதான மேற்படி சந்தேகநபரை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

சந்தேகநபர் பருத்தித்துறையைச் சேர்ந்தவர் எனவும் தற்போது மட்டுவில் பகுதியில் திருமணம் செய்து வசித்து வருவதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.