;
Athirady Tamil News

சட்டவிரோத மீன்பிடியில் சிக்கிய இந்திய மீனவர்கள்!

0

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 14 பேர் காரைநகர் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் -காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதி மீனவர்கள் 14 பேர் அவர்கள் பயணித்த ஒரு படகுடன் நேற்று (17.12.2023) ஞாயிற்றுக்கிழமை மாலை இலங்கை கடற்படையால் கை செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகர் – கோவளம் கடற்பரப்பில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்ட 14 மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நாளைய தினம் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு யாழ்ப்பாணம் மாவட்ட நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.