;
Athirady Tamil News

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒளிவிழா

0

யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் 2023ஆம் ஆண்டிற்கான ஒளிவிழா நிகழ்வானது மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் தலைவரும் மாவட்ட செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளருமான இ.சுரேந்திரநாதன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (20) நடைபெற்றது .

நத்தார் தீப ஔியூட்டலுடன் ஆரம்பமான நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு, ஆசியுரை வழங்குவதற்காக அருட்தந்தை வணக்கத்திற்குரிய J.J.ஞானரூபன் அவர்களும் கிறிஸ்துமஸ் செய்தியை வழங்க அருட்தந்தை வணக்கத்திற்குரிய எம்.எல்.தயாகரன் அவர்களும் வருகை தந்திருந்தனர்.

குறித்த நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் வரவேற்பு நடனம்,பாடல், நாடகம் ,பேச்சு மற்றும் நடன நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் நத்தாா் தாத்தா வருகையுடன் சிறுவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டு கிறிஸ்மஸ் நத்தார் இசையுடன் விழா சிறப்பாக இனிதே நிறைவுபெற்றது.

மேலும் குறித்த நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.