;
Athirady Tamil News

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் தம்பதிகள் வைத்தியசலையில்

0

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி – ஒந்தாச்சிமடம் பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை (25) இடம்பெற்ற விபத்தில் கணவனும், மனைவியும் காயமடைந்துள்ளனர்.

ஓட்டமாவடி பகுதியிலிருந்து கல்முனை நோக்கி முச்சக்கர வண்டியில் சென்ற குடும்பத்தினர் ஒந்தாச்சிமடம் பகுதியில் வைத்து படி ரக வாகனம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

விபத்தில் ஆட்டோவை செலுத்திச் சென்ற கணவனும் ஆட்டோவில் பயணித்த மனைவியும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.