;
Athirady Tamil News

பிரபல வர்த்தகர் ஒருவர் உறங்கிக் கொண்டிருக்கும் போது நடந்த சம்பவம்!

0

வத்தளையில் பிரபல தொழிலதிபர் ஒருவரின் துப்பாக்கி திருடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த வர்த்தகர் தனது உரிமம் பெற்ற தனிப்பட்ட துப்பாக்கி திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

தான் தூங்கும் போது படுக்கையில் வைத்திருந்த துப்பாக்கியை யாரோ திருடிச் சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

சந்தேக நபர் துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட 12 தோட்டாக்களை திருடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.