;
Athirady Tamil News

இலங்கையில் மின்சார பாவனையை தவிர்க்கும் மக்கள்

0

கடந்த மூன்று மாதங்களாக ஒரு மின்சார அலகேனும் பயன்படுத்தாத 30,000 வாடிக்கையாளர்கள் இருப்பதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த இணைப்புகளில் வீடுகளும், வர்த்தக நிறுவனங்களும் உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இவர்களில் 30,000 பேர் வெளிநாடுகளுக்கு சென்ற மின்சார பாவனையாளர்களும், மற்றொரு பிரிவினர் வசிப்பிடத்தை மாற்றியவர்களும் உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.