;
Athirady Tamil News

காலிமுகத்திடல் கடலில் அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்ட சிறுவர்களில் ஒருவர் உயிரிழப்பு

0

கொழும்பு காலிமுகத்திடல் கடற்பகுதியில் இன்று (10) நீராடச் சென்ற போது அலையில் அடித்துச் செல்லப்பட்டு, பின்னர் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரு சிறுவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ள மற்றுமொரு சிறுவனைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று மாலை காலிமுகத்திடல் கடற்பகுதியில் நீராடிக்கொண்டிருந்த போதே இந்தச் சிறுவர்கள் அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.