;
Athirady Tamil News

நாடளாவிய ரீதியில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை

0

நாடளாவிய ரீதியில் சுனாமி அனர்த்தம் மற்றும் நாட்டில் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூறும் ‘தேசிய பாதுகாப்பு தினம்’ இன்று (26.12.2023) அனுஷ்டிக்கப்படுகிறது.

2004 ஆம் ஆண்டி சுனாமியில் 35,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளதுடன் 5,000 இற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.

இதனை ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூறும் முகமாக கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் (26.12.2023) ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடணப்படுத்தப்பட்டு தேசிய நிகழ்வாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

மௌன அஞ்சலி
சுனாமி அனர்த்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் உயிரிழந்த மக்களை நினைவு கூறும் வகையில் காலை 9.25 முதல் 9.27 வரை 2 நிமிட மௌன அஞ்சலியும் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இன்று கொண்டாடப்படும் தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, சுனாமி குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் புதிய ஒலி எழுப்பும் செயலியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.