;
Athirady Tamil News

திடீரென பரவிய மூளைக்காய்ச்சல் தொடர்பில் வெளியாகிய தகவல்

0

மூளைக்காய்ச்சல் குறித்து தேவையில்லாத அச்சம் கொள்ள தேவையில்லை என்று சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர்.

மாத்தறை சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் ஒருவருக்கு மூளைக்காய்ச்சல் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அண்மையில் திடீரென மாத்தறை சிறைக் கைதிகள் 17 பேர் சுகவீனமடைந்துள்ளனர்.

மூளைக்காய்ச்சல்
அதில் நால்வரின் உயிரியல் மாதிரிகள் பரிசோதனைக்காக பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பரிசோதனைகளில் ஒருவருக்கு மாத்திரம் மூளைக்காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

மாத்தறை சிறைச்சாலையின் கைதி ஒருவர் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட பின்னர் இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.