;
Athirady Tamil News

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரப் பணிகளை ஆரம்பிக்கத் தீர்மானத்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி

0

ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகளை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது.

நாடு முழுவதிலும் இந்தப் பிரச்சாரப் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 19ம் திகதி மாவட்டத்தை மையப்படுத்தி பிரதான பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளதாகவும் அதன் பின்னர் நாடு முழுவதிலும் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நிரப்பப்படவுள்ள வெற்றிடங்கள்
மேலும் கட்சியின் முக்கிய பதவிகளுக்கு நிலவி வரும் வெற்றிடங்கள் அடுத்த மாதம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சார பொறிமுறைமை தொடர்பில் கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார, கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.