;
Athirady Tamil News

மட்டு. கோட்டைக்கல்லாறு கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்

0

மட்டக்களப்பு – கோட்டைக்கல்லாறு கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று இன்று (28.12.2023) காலை கரையொதுங்கியுள்ளது.

அப்பகுதி கடலில் கடந்த (27.12.2023) ஆம் திகதி மாலை மர்மப் பொருள் ஒன்று மிதந்துள்ளதை அங்குள்ள மீனவர்கள் அவதானித்துள்ளனர்.

இந்நிலையில், இவ்வாறு கரையொதுங்கியுள்ள பொருள் என்ன என்பது தமக்குத் தெரியாது, இப்பொருள் தொடர்சியாக இவ்விடத்திலேயே இருக்குமாக இருந்தால் தமது மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பெரும் தடையாக அமையும் எனவே இதனை சம்மந்தப்பட்டவர்கள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

பார்வையிட்ட பொலிஸார்
கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த பொருளை களுவாஞ்சிகுடி பொலிஸாரும் பார்வையிட்டுச் சென்றுள்ளதாக என அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்பொருள் சிவப்பு நிறத்தில் கூம்பக வடிவில் போத்தல் போன்று பெரியதாக அமைந்துள்ளதுடன் பொருளின் மேற்பகுதியில பி.எம்.ரி. எனவும் பின்பக்கம் பி என்ற எழுத்தும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.

குறித்த பொருளில் ஒருபக்கம் சிறிய ரக ரயர் ஒன்று பொருத்தப்பட்டு அதில் இரும்பிலான சங்கிலியும் பொருத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.