;
Athirady Tamil News

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாரிய விபத்து (படங்கள்)

0

மாத்தறை நோக்கிச் செல்லும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகளும் பௌசர் ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தானது, நேற்று(29) இடம்பெற்றுள்ளது.

அத்துடன், விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காரணம்
இந்நிலையில், விபத்திற்கு சாரதிகளின் கவனக்குறைவே காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை தெற்கு அதிவேக வீதி போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை, இந்த விபத்தினால் மாத்தறைக்கு செல்லும் வீதியில் சுமார் 5 கிலோமீற்றர் வரை பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.