;
Athirady Tamil News

யாழில். விசேட சோதனை நடவடிக்கை

0

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

அதன் போது , மத்திய பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற பேருந்துகள் மற்றும் அங்கிருந்து புறப்பட தயார் ஆனா பேருந்துகளை பொலிஸார் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனையிட்டனர்.

அத்துடன் பயணிகளின் உடமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அதேவேளை நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் எழுதுமட்டுவாழ் பகுதியில் கொடிகாம பொலிஸார் பேருந்துகளை வழிமறித்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.