;
Athirady Tamil News

கூட்டணி பத்தி நா பாத்துக்குறேன்..நீங்க இத பண்ணுங்க..! மா.செ’க்கு இபிஎஸ் முக்கிய அட்வைஸ்..!

0

சொன்ன கூட்டணி பற்றிய கவலை வேண்டாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசியுள்ளார்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழல், தமிழக எதிர்க்கட்சியான அதிமுக தீவிர முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக, கூட்டணி குறித்து கணக்குகளையும் போட்டு வருகின்றது.

இன்று, சென்னையில் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியுள்ளார்.

நான் பார்த்துக்கொள்கிறேன்
இந்நிலையில், கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, கூட்டணி குறித்தான முடிவை நான் பார்த்து கொள்கிறேன் என்று தெரிவித்து, கட்சிக்காக வேட்பாளர்களை குறித்த வேலையில் இறங்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

கூட்டம் முடிந்துள்ள நிலையில், இன்று மாலை வரை அனைத்து மாவட்ட செயலாளர்களையும் சென்னையில் இருக்கும் படி அவர் கேட்டுக்கொண்டதாகவும், எடப்பாடி மாவட்ட செயலாளர்களை தனியாக சந்தித்து பேசவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

தற்போது வரை அதிமுக கூட்டணியை SDPI கட்சி மற்றும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் அதிமுகவுடன் நெருக்கம் காட்டி வருவதால் அவர் அதிமுக கூட்டணிக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.