;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் இன்றும் கரையொதுங்கிய மர்மப்பொருள்!

0

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் இன்று ((13) சனிக்கிழமையும் ஒரு மர்ம பொருள் கரை ஒதுங்கியுள்ளது.

அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் பல பொருட்கள் கரை ஒதுங்கிவருகின்றன.

குறிப்பாக, வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வீசுகின்ற காற்று காலப்பகுதியில் அதிகளவான பொருட்கள் கரை ஒதுங்குவது வழமையாக இருக்கின்றது.

அந்தவகையில் யாழில் புத்த பெருமான் அமர்ந்திருக்கக் கூடிய தேர் , உட்பட பல்வேறு பொருட்கள் அண்மை காலமாக கரையொதுங்கியுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.