;
Athirady Tamil News

இணையத்தில் வைரலான முகேஷ் அம்பானி மகனின் திருமண அழைப்பிதழ்! வெளியான திகதி

0

அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இளைய மகன்
இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரான முகேஷ் அம்பானி, நூறு பில்லியன் டொலர் பணக்கார கிளப்பில் இருக்கும் ஒரே இந்தியர் ஆவார்.

இவரது இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சென்ட் என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமானது.

ஆனால் இவர்களது திருமண திகதி குறித்து வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் முகேஷ் அம்பானி, நீதா அம்பானி கையால் எழுதப்பட்ட குறிப்புடன் அனந்த் அம்பானியின் திருமண அழைப்பிதழ் வெளியாகியுள்ளது.

Pre Wedding நிகழ்ச்சிகள்
இதன்படி குஜராத்தின் ஜாம்நகரில் மார்ச் 1 முதல் 3ஆம் திகதி வரை Pre Wedding நிகழ்ச்சிகள் நடக்கும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் திருமண திகதி குறிப்பிடப்படவில்லை.

மேலும், திருமண அட்டையில் அனந்த் அம்பானியின் புதிய அத்தியாயத்தின் தொடக்கம், தங்கள் குடும்பத்தின் ஆரம்ப வாழ்க்கையை இணைகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஜாம்நகரில் ஆசியாவின் பாரிய மாம்பழ தோட்டம் அமைந்துள்ளதாகவும், அப்பகுதியில் அனந்த் பல விலங்குகளை காப்பாற்றி வளர்த்து வருவதாகவும், இயற்கை சூழ நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கிறோம் எனவும் முகேஷ் அம்பானியும், நீதா அம்பானியும் எழுதியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.