;
Athirady Tamil News

வாகன இறக்குமதி தொடர்பில் வர்த்தமானி வெளியீடு: அமைச்சர் விளக்கம்

0

அரசாங்கத்திற்கு அத்தியாவசியமான சில வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் சாதாரண வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

பல அரச நிறுவனங்களின் அத்தியாவசியப் பணிகளுக்காக சில வாகனங்களை மாத்திரம் கொண்டு வருவதற்காகவே இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள்
கல்வி அமைச்சுக்கு 2 பேருந்துகளும், சுகாதார அமைச்சுக்கு 21 வண்டிகளும், நடமாடும் மகப்பேறு கிளினிக்கிற்கு 3 வாகனங்களும், தொழிலாளர் அமைச்சுக்கு 1 வாகனமும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு 3 பயணிகள் பேருந்து மாத்திரமே இதன் மூலம் கொண்டுவரப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இவை அனைத்தும் வெளிநாட்டு உதவியின் அடிப்படையிலேயே இந்த நாட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.