;
Athirady Tamil News

தென்னிலங்கையை துயரத்தில் ஆழ்த்திய சம்பவம்: இரு மாணவிகள் உட்பட மூவர் உயிரிழப்பு!

0

களுத்துறை, களுகங்கையில் நீராடச்சென்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் இரண்டு பாடசாலை மாணவிகளும் ஒரு மாணவனும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 மற்றும் 16 வயதுடைய இரு மாணவிகளும் 17 வயதுடைய மாணவர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் களுத்துறை பன்வில மற்றும் தொடங்கொடை பகுதிகளை சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த அனர்த்தம் களு கங்கையில் நீராடுவதற்காக சென்ற நிலையில் ஏற்பட்டுள்ளது.

சக மாணவர் ஒருவரின் தாயாரின் பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்ற மாணவர்களே இவ்வாறு நீராடச் சென்ற நிலையில் உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.